வேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2020 09:08
சூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை நடந்தது. சூலூர் வட்டார வேல் வழிபாட்டு குழு சார்பில், நேற்று பல்வேறு ஊர்களில் வேல் வழிபாடு நடந்தது. சமூக வலைத்தளத்தில், வேல் மற்றும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பதிவு செய்த கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையிலும், கொடிய நோய்களிலிருந்து மக்களை காக்க வேண்டியும், பக்தர்கள் நேற்று வேல் பூஜை மற்றும் சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில், வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் மற்றும் வேலுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அர்ச்சனை மற்றும் சஷ்டி கவச பாராயணம் நடந்தது.வெற்றிவேல், வீரவேல் என பக்தர்கள் சரண கோஷத்துடன் வழிபட்டனர். இதேபோல், கருமத்தம்பட்டி சாராதாம்பாள் நகரில் சங்கமம் கலைக்குழு சார்பில் வேல்பூஜை நடந்தது. கணியூர், சூலூர், இருகூர், முத்துக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட ஊர்களில் வீடுகளுக்கு முன் வேல் கோலமிட்டு, வேல் பூஜை மற்றும் சஷ்டி கவசத்தை பொதுமக்கள் பாராயணம் செய்தனர்.