இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி: ஆன்லைனில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2020 03:08
கோவை: கோவை, இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கிருஷ்ணா – ராதா சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் மற்றும் ராதை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொரோனாவால் பக்தர்களுக்கு கோவிலுக்கு வருவதற்கு அனுமதி இல்லாததால் ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.