மகாவிஷ்ணு சூரிய வம்சத்தில் ராமனாக அவதாரம் செய்ததால் ‘ரவிகுல திலகன்’ என்று அழைக்கப்பட்டார். இப்படி சூரியனுக்குப் பெருமை ஏற்பட்டதைப் போல தனக்கும் பெருமை வேண்டுமென சந்திரன் திருமாலிடம் வேண்டினான். பெருமாளும் மனமிரங்கி, ‘‘உன் பெயரை என் பெயரோடு சேர்த்துக் கொண்டு விடுகிறேன்’’ என்று சொல்லி ‘ராமச்சந்திரமூர்த்தி’ என்று மாற்றிக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் சந்திரனுக்கு ஒரு வரமும் கொடுத்தார். அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் அவதரிக்கப் போவதாக வாக்குக் கொடுத்தார். அதன்படி கிருஷ்ணஜெயந்தி அன்று தன்னை வழிபாடு செய்வதோடு, சந்திரனையும் வழிபாடு செய்ய கட்டளை இட்டார். அதனால், கிருஷ்ணஜெயந்தி அன்று வானில் உலாவரும் நிலவையும் வழிபடுவது நன்மை தரும்.