சூலூர்: அனைத்து பெருமாள் கோவில்களில் கோகுலாஷ்டமியை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு, சூலூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள், கிருஷ்ணர், வேணுகோபாலசுவாமி கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. ஊரடங்கால் பக்தர்கள் கூட்டம் இல்லை. செங்கத்துறை உள்ளிட்ட ஊர்களில் கிருஷ்ணன், ராதை வேடமணிந்த குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து வீடுகளில் வழிபாடு நடத்தினர். இதேபோல், மதுரை, கோவை, திருப்பூர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.