திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு ராகவேந்திரர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பஜனை 8:00 மணிக்கு கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் பலரும் கிருஷ்ணர் வேடமணிந்து இதில் கலந்து கொண்டனர். விழா அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட கிருஷ்ணருக்கு சீகடை உள்ளிட்ட தின்பண்டங்கள் படையலிடப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.