Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் ... கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள்: வீடுகளில் பிரதிஷ்டை செய்ய பிரசாரம்
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள்: வீடுகளில் பிரதிஷ்டை செய்ய பிரசாரம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
03:08

பொள்ளாச்சி:கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்தாண்டை விட இந்தாண்டு விநாயகர் சிலை உற்பத்தி குறைந்துள்ளது. வீடுகளில் வழிபாடு இருக்கும் என்ற நம்பிக்கையில், களிமண் சிலைகள் தயாரித்து வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில், இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம் போல நடைபெற அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்து அமைப்புகள் காத்திருக்கின்றனர்.வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெறும் என்ற நம்பிக்கையில் மண்பாண்ட தொழிலாளர்கள், சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி ஆர். பொன்னாபுரம், ஆவல்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள், அழகிய விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:ஊரடங்கு காரணமாக நடப்பாண்டு, 70 சதவீதம் மட்டும் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு சிலை, 100 ரூபாய் முதல், இரண்டாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, மக்கள் சிலைகளை வாங்கி சென்று, வீடுகளில் வழிபாடு செய்வார்கள். இந்தாண்டு, பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுமா என்பது தெரியவில்லை. இதனால், அனைத்து இந்துக்கள் வீடுகளிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இந்து அமைப்பினர் கூறுகையில், இந்தாண்டு அனைத்து இந்துக்கள் வீடுகளிலும், விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாட்டுக்கு பின், நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய பிரசாரம் செய்கிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க காக்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி ; புதுச்சேரி அடுத்த வில்லியனூர் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை அசோகவனத்தில் உள்ள சீதா தேவி கோவிலில் கடந்த ஞாயிற்று கிழமை மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar