சூலூர்: சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை ஒட்டி அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
ஆடி வெள்ளியை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ராமாச்சியம் பாளையம் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், செங்கத்துறை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் முடித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பூ உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.