பதிவு செய்த நாள்
15
ஆக
2020
10:08
திருத்தணி : திருத்தணி அடுத்த, தாழவேடு கிராமத்தில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா, 11ம் தேதி முதல், நேற்று வரை, மூன்று நாட்கள் நடந்தன.மூன்றாம் நாளான நேற்று, காலையில் உற்சவர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு, பட்டு வஸ்திரம் அணிந்து, ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.