பதிவு செய்த நாள்
15
ஆக
2020
10:08
மதுரை; சதுரகிரி மலையடிவாரத்தில் புதிதாக கட்டியுள்ள சர்ச்சால், சர்ச்சை உண்டானது. மதுரை, பேரையூர் தாலுகா, சாப்டூர் சதுரகிரி மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல, இரண்டு மலைப்பாதைகள் உள்ளன.
சாப்டூர் வாழைத் தோப்பு பாதையிலும், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை வழியையும் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாழைத் தோப்பில் பக்தர்கள் தங்கும் விடுதியின் பின்புறம், அணைக்கரைபட்டி பிரபாகர் என்பவர், அவர் சொந்த இடத்தில் சர்ச் கட்டி உள்ளார்.
இது தொடர்பாக, மதுரை, எஸ்.பி.,யிடம் ஹிந்து மக்கள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அதில், ஒரு வழிபாட்டு தலம் கட்ட வேண்டும் என்றால், அரசு வழிமுறைகளை பின்பற்றி, அதற்கான அனுமதி பெற வேண்டும். ஆனால், எதையும் பின்பற்றாமல், ஹிந்து பக்தர்கள் செல்லும் பாதை அருகே சர்ச் கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.பிரபாகர், தற்போது சென்னையில் குடியிருக்கிறார்.