பிறந்த நேரத்தை வைத்து நாம் ஜாதகம் கணிப்பது போல கடவுளுக்கும் ஜாதகம் உண்டு. விநாயகரின் நட்சத்திரம் அஸ்தம் என்பதால் கன்னி ராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் உள்ளனர். சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். செவ்வாய்க்குரிய விருச்சிகமே இவரது லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்தால் நல்ல புத்தி உண்டாகும். முயற்சியில் குறுக்கிடும் தடை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். வள்ளியை மணம்புரிய முருகனுக்கு துணைநின்றவர் விநாயகரே. இதை அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே என்கிறது திருப்புகழ்.