கிருஷ்ணகிரி; மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, விநாயகர் கோவிலுக்கு, இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருள் வழங்கினர்.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஆண்டுதோறும் பூஜை பொருட்கள் வழங்கி, பூஜையில் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டு கொரோனா பரவலால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள, வரசித்தி விநாயகர் கோவிலுக்கு, நேற்று பூஜை பொருட்கள் வழங்கினர். தொடர்ந்து, கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.