பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பக்தர்கள் 18 லட்சம் நாம ஜபம் செய்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி அனைத்து நன்மைகளும் பெறுவோம் என ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நேற்று ராதாஷ்டமி பூஜை நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ராதாஷ்டமி முதல் நவ.,14 ஐப்பசி சுவாதி வரை உலக நன்மைக்காகவும், எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் ஏற்படவும் 18 லட்சம் நாம ஜபம் செய்வோம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே மந்திரத்தை தினமும் ராம ஜபம் செய்து 92454 39344 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பவும். இவை நவ.14ல் கிருஷ்ணர், ராதை பாதத்தில் வைத்து சமர்ப்பணம் செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.