பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் உபகோயிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில், வேளீஸ்வரர் கோயிலின் வருடாபிஷேகம் ஆக.,31 காலை 10:00 மணியளவில் நடைபெற உள்ளது. கோயிலின் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு உரிய நேரங்களில் கோயிலின் பழக்க வழக்கப்படி நடைபெறும். இதற்கு பக்தர்கள் அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.