* எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாக இருங்கள். * இருதயத்தில் நேர்மையுள்ளவர்களே ஆனந்த முழக்கமிடுங்கள். * மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து. * விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள். * மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையால் அல்ல. * ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள். * மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது. * உங்கள் இருதயம் கலங்காதிருக்கட்டும். * இளமையின் மோக இச்சையில் இருந்து பறந்தோடுங்கள். * பாவிகள் நயம் காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள். * ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன். * ஆபத்து சமயத்தில் உதவுபவனே நண்பன் பொன்மொழிகள்