Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்ம முனீஸ்வரர் கோயிலில் களரி ... பக்தர்களின்றி வேளாங்கண்ணியில் திருவிழா துவக்கம் பக்தர்களின்றி வேளாங்கண்ணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்
எழுத்தின் அளவு:
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
11:08

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால், உண்டியல் மற்றும் இதர வருமானம், கடும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி முதலீட்டின் வட்டியை எடுத்து, நிர்வாக செலவுகளை சமாளிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.பக்தர்கள், 80 நாட்களுக்கு பின், சுவாமி தரிசனம் செய்ய, அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும், தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, மிக குறைவாகவே உள்ளது. இதனால், உண்டியல் உள்ளிட்ட, கோவிலின் இதர வருவாய், கடுமையாக சரிந்தது.திருமலை கோவிலில், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.அவர்களுக்கு, மாத சம்பளம் வழங்குவது உள்ளிட்ட, இதர கோவில் நிர்வாக செலவுகளை சமாளிப்பதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கோவில் நிர்வாக செலவுகளை சமாளிப்பது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரிய குழு கூட்டம், நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின், தேவஸ்தான அறக்கட்டளை வாரிய தலைவர், சுப்பா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருமலை கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, பல்வேறு வங்கிகளில், முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு முறையில் முதலீடு செய்யப்பட்டு, முதிர்ச்சி அடைந்ததும், வட்டி பெறப்பட்டு வந்தது.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, இந்த முதலீடுகளை, மாத முறைக்கு மாற்றி, ஒவ்வொரு மாதமும் வட்டி பெற்று, அதை கோவில் நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar