உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனையொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின் சுவாமிக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் வளாகத்தில் புறப்பாடு நடந்தது.