செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களை அனுமதிப்பதற்காக கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் திறக்கப்பட்டு, இன்று முதல் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.இதற்காக நேற்று காலை முதல் கோவில்வளாகம், பக்தர்கள் வரும் வரிசை, அன்னதான கூடம், ஓய்வறை ஆகிய இடங்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். சாமி தரிசனம் செய்ய வரும் 10 வயதுக்கு மேற்பட்டவர்களும் 65 வயதுக்கு குறைவான பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும்.சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.