பதிவு செய்த நாள்
02
செப்
2020
11:09
தொண்டாமுத்தூர்: ஆலாந்துறை நாகசக்தி அம்மன் கோவிலில் உள்ள ராகு கேது ஸ்தலத்தில், ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது.
ஆலாந்துறை, பெருமாள் கார்டனில், ஸ்ரீ நாகசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கான விருட்சங்கள் அமைந்துள்ள வனத்தில், ராகு கேது பகவான்களுக்கு என, தனியாக கோவில் அமைந்துள்ளது. நேற்று, இந்தாண்டின், ராகு கேது பெயர்ச்சி நடந்தது. ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, இக்கோவிலில் நேற்று பகல் 1:30 முதல் மாலை 4:30 மணி வரை ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதனையொட்டி, பச்சாபாளையம் ஸ்ரீராம் சிவாச்சாரியார் தலைமையில், விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், ராகு கேது கலச ஆவாஹனம், 108 கலச பரிகார வேள்வி, ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து, 4:30 சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு, ராகு கேது பகவான்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில், இக்கோவிலின் நிறுவனர் ரங்கராஜ், விஷ்ணு பிரபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.