* பேசுவதை விட சில நேரத்தில் மவுனத்தால் அதிக நன்மை கிடைக்கும். * மனம், உடலைப் போல மனிதன் உயிருக்கும் மதிப்பளிக்க வேண்டும். * மனித தன்மை நிறைவு பெறும் நிலையில் ஆன்மிகத்தின் உச்சியை அடையலாம். * பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆன்மிகம் கல்வி அவசியம். * அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனத்தில் தள்ளி விடும். * ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம். * கல்வியாளராக இருந்தாலும் ஆன்மிக சிந்தனை இல்லாவிட்டால் பயனில்லை. * கடவுளை தேடுவதாக இருந்தால் உங்களின் இதயத்தில் தேடுங்கள். * சுயநலத்தை ஒழித்தால் சமுதாயமே உயர்ந்து விடும். * நம் குணத்தை உருவாக்குவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. * வெளியில் தெரியும் வறுமையை விட, மனதிலுள்ள வறுமையே அபாயமானது. * ஆயுதத்தை விட தீய கருத்து அதிக தீமையை ஏற்படுத்தும். * பழி வாங்கும் எண்ணத்துடன் யாரையும் அணுகக் கூடாது. * விருப்பு வெறுப்பு இல்லாத மனிதன் நலமுடன் வாழ்வான். * கட்டுப்பாடும், கடும் உழைப்பும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். * புகழ் என்னும் கவர்ச்சிக்காக பொதுவாழ்வில் ஈடுபடக் கூடாது. * தியாக மனப்பான்மை இருந்தால் வாழ்வில் அமைதி கிடைக்கும். * கீழ்படிதல் இல்லாவிட்டால் சமுதாயம் சீர்கெட்டு விடும். * கல்வி மனிதனுக்கு இரண்டாவது பிறப்பை போன்றது.