* தேவைகளை குறைத்துக் கொண்டு நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு. * தினமும் அதிகாலையில் தியானம் செய்வதை வழக்கமாக கொள். * வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தர்மவழியில் செலவிடு. * பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படித்திடு. * தினமும் இரண்டு மணி நேரம், சாப்பிடும் போதும் மவுனத்தை கடைபிடி. * எந்த நிலையிலும் உண்மை பேசுவதில் உறுதியாக இரு. . * மற்றவர் உணர்ச்சிகளை புண்படுத்தாமல் அனைவரிடமும் அன்பு காட்டு. * தவறால் கிடைத்த அனுபவத்தை மறக்காதே. உன்னையே நீயே திருத்திக் கொள். * துாங்கும் முன்பும், துாங்கி எழுந்த பின்பும் கடவுளை மனதார நினை. * எண்ணம், சொல், செயலில் எவருக்கும் துன்பம் செய்யாதே. * அநியாய வழியில் கிடைத்த பணம், பொருளை ஏற்காதே. * பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மையால் கோபத்தைக் கட்டுப்படுத்து. * கடவுள் நம்மை விட்டு அகலாத உயிர்த்தோழனாக இருக்கிறார். * வழிப்போக்கனைப் போல உலகில் வாழ்ந்தால் ஆசைகள் குறைய தொடங்கும். * ஆசைகளை குறைக்க பழகினால் கடவுளை எளிதாக அடையலாம். * பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். பகைவரையும் நேசி. * தேவையை குறைத்துக் கொண்டு திருப்தியுடன் வாழ். * தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடு. * நேர்மையை உயிராக போற்று. உழைப்பால் கிடைத்த பணத்தில் வாழ்வு நடத்து.