Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தணும்: ... ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ரோத்ஸவ தீர்த்தவாரி ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ரோத்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2020
01:09

 மயிலாப்பூர்: மயிலாப்பூர் பகுதியில் உள்ள கோவில், சர்ச், மசூதி நிர்வாகிகளுடன், போலீசார் ஆலோசனை நடத்தினர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.பக்தர்களை அனுமதிக்காமல், கோவில், சர்ச், மசூதிகளில் வழக்கமான பூஜை, திருப்பலி, தொழுகைகள் நடந்தன. விசேஷ நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.இந்நிலையில், தமிழக அரசு செப்., 1 முதல், வழிகாட்டி நெறிமுறைகளுடன், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதியளித்ததை தொடர்ந்து, அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.தொடர்ந்து, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மெரினா காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளுடன், மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில், நேற்று முன்தினம் மாலை ஆலோசனை நடந்தது.இதில், சமூக இடைவெளி, கிருமி நாசினி, அறிவிப்பு பலகை வைப்பது போன்ற, அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.இது குறித்து, தேவாலய நிர்வாகிகள் கூறியதாவது:ஞாயிற்றுக்கிழமைகளில், தேவாலயங்களில் நடக்கும் திருப்பலி வழிபாட்டில், அந்தந்த தேவாலயங்களில் உறுப்பினர்களாக உள்ள, 50 நபர்கள், வாரத்திற்கு ஒரு பகுதியாக பிரித்து, அனுமதிக்கப்பட உள்ளனர்.மற்றவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டோர், குழந்தைகள் வீட்டில் இணையதளம் வாயிலாக, திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள்: தான்தோன்றிமலை கல்யணா வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு, நேற்று, சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்தனர். பல பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

* கரூர் நகரில் உள்ள அனைத்து, பிரசித்தி பெற்ற கோவில்களிலும் பக்தர்களுக்கு, அர்ச்சகர்கள் திருநீறு, குங்குமம், பூ உள்ளிட்ட பிரசாதங்களை வழங்குவது இல்லை. தரிசனம் செய்ய வரும் பக்தர்களே, பிரசாதத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதன்படி, நாள்தோறும் ஒவ்வொரு கோவில்களிலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள், திருநீரு உள்ளிட்ட பிரசாதத்தை தொட்டு எடுத்து செல்கின்றனர். இதனால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அர்ச்சகர்களே வழக்கம் போல, சுழற்சி முறையில் பிரசாதம் வழங்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar