சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் கனமழை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2020 02:09
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 6:00 மணிக்கு துவங்கிய சாரல் மழை, படிப்படியாக அதிகரித்து கனமழையாக இரவு 8:00 மணிவரை பெய்தது. தாணிப்பாறையிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழுக்குபாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடைகளில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இது வத்திராயிருப்பு ரோட்டிலுள்ள பாலத்தை தொட்டு சென்றது. பொதுப்பணி, வருவாய், அறநிலையத்துறை, வனத்துறை அதிகாரிகள், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.