Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ சக்தி விநாயகர் கோயில் ... சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் தினமும் 5,000 பக்தர்களுக்கு அனுமதி சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2020
04:09

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கோமாளிப்பட்டியில், ஊர்களுக்கு உள்ளூர் படை பாதுகாப்பு தரும்செய்தியை தாங்கிய, 13ம் நுாற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நகரத்தாருக்கு பாதுகாப்புகாளையார்கோவில் தொல்லியல் குழுமத்தை சேர்ந்த, இலந்தக்கரை ரமேஷ், விக்னேஷ்வரன், சரவணமணியன் கூறியதாவது:உள்ளூர் படை பற்றிய குறிப்புகளுடன், ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆசிரியம் என்பது அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் பற்றிய செய்திகளாகும். இதுபோன்ற கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கிடைத்துள்ளன. தனிப்பலகை கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டுள்ளன.ஊரவர், நாட்டவர், சிற்றரசர் படைப்பிரிவினர், ஊர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு, 13ம் நுாற்றாண்டில், குலசேகரபாண்டியன் காலத்தை சேர்ந்தவை. வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.கேழாநிலை என்பது, தற்போது கீழாநிலைக்கோட்டையாக மாறி இருக்கலாம். இப்பகுதி, நிலைப்படை தங்கும் இடமாக இருந்துள்ளது. வீரர்கள், இரட்டகுலகாபுரம் நகரத்தாருக்கு பாதுகாப்பு வழங்கிஉள்ளனர். பூரணகும்ப சின்னம் இரண்டாவது கல்வெட்டில், குலசேகரபாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டில், சித்திரை மாதம், கனவழி நாட்டு படையும், கரணிவற்கு ஆசிரியம் கொடுத்த செய்தி உள்ளது. இதில் பூரணகும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar