Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் புஷ்ப ... கோவர்த்தனகிரி அலங்காரத்தில் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி வழிபாடு: பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி வழிபாடு: பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

10 செப்
2020
10:09

திருப்பூர்: கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வசதிகளுடன், பெருமாள் கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடக்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.திருப்பூர் மாவட்டத்தில், மொண்டிபாளையம் வெங்கடேசபெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், அவிநாசிபாளையம் ராமசாமி கோவில், திருப்பூர் வீர ராகவப்பெருமாள் கோவில், தாராபுரம் ஆஞ்சநேயர் கோவில் என, வைணவ தலங்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு களைகட்டும்.பக்தர்கள் கூறியதாவது:கொரோனாவை ஒழித்துக்கட்ட, இறைவழிபாடு அவசியம். எனவே, கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. புரட்டாசி சனிக்கிழமை, சுகாதாரத்துறையினர் முக்கிய கோவில்களில் முகாமிட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பிறகே கோவிலில் அனுமதிக்கலாம். கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின், சமூக இடைவெளியுடன் கூடிய வரிசைக்கு அனுமதிக்கலாம். பக்தர்கள், கோவிலின் எப்பகுதியையும் கையில் தொடாமல் வழிபட்டு செல்ல அறிவுறுத்தலாம்.மஞ்சளும், துளசியும் இருக்கும் இடத்தில் நோய்க்கிருமி அண்டாது. எனவே, பெருமாள் கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில்,புரட்டாசி சனிக்கிழமை தரிசன ஏற்பாடு துவங்கியுள்ளது.வருவாய்த்துறை ஆலோசனையை பெற்று, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar