மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ருத்ர பசுபதீஸ்வரர், திரிபுரசுந்தரி பூஜை நடந்தது. பிணி தோஷங்கள் நிவர்த்தியாகவும், ஆரோக்கிய நலன்கள் வேண்டியும் சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார். பசுபதி அஷ்டகம், வள்ளலார் அருளிய சவுந்திர மாலை, அஷ்டசிகாமணி மாலை படிக்கப்பட்டது. நிர்வாகி ரத்னேஸ்வரி மங்கள ஆரத்தி செய்தார்.