Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிலைகள் திருட்டு 42 ஆண்டுக்கு பின் ... தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2020
05:09

 சென்னை : ஐந்து மாதங்களுக்கு பின், கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, நேற்று முதல் கிருத்திகை என்பதால், வடபழநி ஆண்டவர் கோவிலில், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவாமல் தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சிறப்பு வழிபாடு: ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு, செப்., ௧ம் தேதி முதல், விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கிருத்திகை என்பதால், வடபழநி ஆண்டவர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலை, 5:15 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்து, மூலவருக்கு ராஜ அலங்காரம் நடந்தது. காலை, 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை, 11:15 மணிக்கு, அபிஷேகம் நடந்து, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது.மாலை, 4:30 மணிக்கு மீண்டும் அபிஷேகம் நடந்து, சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இரவு, மூலவருக்கு சந்தனக் காப்பு சார்த்தப்பட்டு, பூஜைகள் நடந்தன. ஊரடங்கிற்கு பின், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டதால், நேற்று அதிகாலை முதல், வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு கருகி, சானிடைசர் கொண்டு கைகள் சுத்தப்படுத்தப்பட்டன. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன், வரிசையில் தரிசிப்பதற்கு ஏதுவாக, தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.

நேரலை தரிசனம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பக்தர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்க ஏதுவாக, நேற்று மாலை, இணையதளம் மூலம் நேரலை தரிசனத்திற்கும், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பெசன்ட்நகர், அறுபடை வீடு முருகன் கோவில், பிராட்வே கந்தசாமி கோவில், குன்றத்துார் முருகன் கோவில், குரோம்பேட்டை குமரன்குன்றம் ஆகிய கோவில்களிலும், ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar