Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை முருகன் கோவில் நடை ... பாரதியார் நினைவு நாள்: நூறாண்டானாலும் நெகிழாத புகழ் படைத்தவன்! பாரதியார் நினைவு நாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிநாட்டு நன்கொடை பெற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
வெளிநாட்டு நன்கொடை பெற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

11 செப்
2020
11:09

 புதுடில்லி : வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில், சீக்கியர்களின் பிரதான புனித தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற வழங்கப்பட்டிருந்த அனுமதி, கடந்த, 1984ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. சீக்கிய தீவிரவாதிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட்ட, ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையை அடுத்து, இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாபில் தீவிரவாதம் ஒழிந்து, அமைதி திரும்பியதை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை மீண்டும் வழங்க வேண்டும் என, பொற்கோவிலை நிர்வகிக்கும், சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, பொற்கோவிலுக்கு, மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்புக்கு, வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது, மிகப்பெரிய முடிவு. இதன் மூலம், நமது சீக்கிய சகோதர, சகோதரிகளின், மக்கள் நல சேவைகள், உலகம் முழுதும் பிரபலமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொற்கோவிலுக்கு வழங்கப்பட்ட அனுமதி போல், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் உள்ள கோவில்களும், வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற அனுமதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் போன்றவை,வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, முறைப்படி அனுமதி கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினால், அனுமதி கிடைக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் நாடு முழுதும் உள்ள பழமையான கோவில்கள் சீரமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar