Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்மார்ட் சிட்டி பள்ளத்தில் ... செல்லாண்டியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழா ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2020
02:09

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். வரும், 17ல் புரட்டாசி மாதம் துவங்கவுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டு புரட்டாசி திருவிழா மற்றும் தேர் திருவிழா நடக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. அதில், புரட்டாசி திருவிழா நடத்தப்படும். தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் காலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பக்தர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும், பக்தர்கள் தேங்காய் உடைத்தல், கற்பூரம், நெய் விளக்குகள் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும், 65 வயதுக்குக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. கலெக்டர் அன்பழகன், அரசு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar