Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்மார்ட் சிட்டி பள்ளத்தில் ... செல்லாண்டியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழா ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2020
02:09

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். வரும், 17ல் புரட்டாசி மாதம் துவங்கவுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டு புரட்டாசி திருவிழா மற்றும் தேர் திருவிழா நடக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. அதில், புரட்டாசி திருவிழா நடத்தப்படும். தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் காலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பக்தர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும், பக்தர்கள் தேங்காய் உடைத்தல், கற்பூரம், நெய் விளக்குகள் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும், 65 வயதுக்குக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. கலெக்டர் அன்பழகன், அரசு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar