காரியாபட்டி: காரியாபட்டி தோணுகாலில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி கோயிலில் ஸம்வத்ஸராபிஷேக விழா நடந்தது. ஸ்ரீலஸ்ரீ மாதா ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி அருளாசியுடன் யோகினியர்களால் ஹோமம் வளர்க்கப்பட்டு, அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அசேபா தொண்டு நிறுவன இயக்குனர் லோகநாதன்ஜி தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை தொழிலதிபர் வரதராஜன் கலந்து கொண்டார்.