Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு நளன் குளத்தில் குவியும் ... கிராம கோவில் பூசாரிகள் பேரவையில் 60 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் காளைக்கு நினைவஞ்சலி: பாலாபிஷேகம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2020
03:09

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, இரண்டு ஆண்டுக்கு முன் இறந்த கோவில் காளையின், நினைவஞ்சலி நிகழ்ச்சியில், காளை அடக்கம் செய்த இடத்தில், கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள, தின்னகழனி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த, 15 ஆண்டுக்கு முன், காளை மாடு தானமாக வழங்கப்பட்டது. அதை, கிராம மக்கள் பராமரித்து, சாமியாக வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் எருது விடும் விழாக்களில் பங்கேற்று, காளை மாடு பல பரிசுகளை வென்றது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுக்கு முன், பாறை மீது நடந்து சென்ற காளை மாடு தவறி விழுந்து படுகாயம் அடைந்து, சில மாதங்களில் உயிரிழந்தது. கிராம மக்கள் இறந்த காளையை, ஊரின் நடுவே அடக்கம் செய்து, அங்கு பூஜை செய்து வருகின்றனர். இரண்டாமாண்டு நினைவு நாளான நேற்று முன்தினம் மாலை, காளை நல்லடக்கம் செய்த இடத்தில் பந்தல் அமைத்து, வாழை மரங்கள் கட்டி, பூஜை பொருட்கள் கொண்ட தட்டுவரிசையை எடுத்துகொண்டு, மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கை முழங்க, ஊரை சுற்றி வந்து, காளை சமாதியில், கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், காளை மாட்டை கடவுள் போல் நினைத்து வழிபட்டு வருகிறோம். சடங்கு, சம்பிரதாயம் செய்வதன் மூலம், இக்கிராமத்தில் உள்ள கால்நடைகள் நோய், நொடி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar