பதிவு செய்த நாள்
14
செப்
2020
03:09
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில், பக்தர்கள்இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே அமைந்துள்ளது, கோதண்டராமர் கோவில். இது, ராமாயண வரலாற்றில் தொடர்புடையது.ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக ராமர் அறிவித்து, பட்டாபிஷேகம் சூட்டினார். இதன் நினைவாக, இக்கோவில் உருவானது. பழமையான இக்கோவிலுக்கு வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணியர் பலர் வந்து தரிசனம் செய்வர். ஊரடங்கால் மூடப்பட்ட இக்கோவில், 161 நாட்களுக்கு பின், செப்., 1ல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன.ஆனால், தனுஷ்கோடி கடற்கரை பூங்கா எனக் கருதி, அங்கு பக்தர்கள், சுற்றுலா பயணியர் செல்ல, போலீசார் தடை விதித்தனர். இதனால், கோதண்டராமர் கோவிலை தரிசிக்க முடியாமல், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால், கோவில், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.ராமர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.