திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2020 10:09
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர் விடுத்த வெ டிகுண்டு மிரட்டலால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கடவுள்களான அபிராமி அம்மன், காளகதீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று காலை 10:40 மணிக்கு சென்னை டி.ஜி.பி., அலுவலகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பே சிய மர்மநபர், இக்கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக்கூறி அழைப்பை துண்டித்தார். உடனே வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குழுவுடன் போலீசார் மோப்ப நாய் மேக்ஸூடன் இணைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் எதுவும் இல்லை என உறுதியானது. மிரட்டல் நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.