கள்ளிக்குடியில் கி.பி.8ம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2020 10:09
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெரிய உலகாணிகுண்டாறு மேற்கு கரையில் 8ம் நுாற்றாண்டு பாண்டியர் கால விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறியதாவது: காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சங்கையா, மாணவர் கண்ணனின் தகவலின் பேரில் ஆய்வாளர் உதயகுமார் உடன் ஆய்வு செய்ததில்8ம் நுாற்றாண்டு சிலை என தெரிந்தது. சிலையின் அமைப்பு, ஆயுதங்கள் அடிப்படையில் காலம் கணிக்கப்பட்டது. குறிப்பாக முப்புரி நுால் வலது கைக்கு மேல் செல்கிறது. இது போல்பாண்டிய நாட்டில், பல்லவர் காலத்தில் பல சிலைகள் கிடைத்துள்ளது. நின்ற நிலையில் உள்ள விஷ்ணுவின்கைகளில் உள்ள சக்கரம், சங்கின் அமைப்பு பழமையான சிலை என காட்டுகிறது. மதுரை கல்வெட்டு தொகுதி ஒன்றில்இவ்வூரின்பழைய பெயர் குலசேகராதிப சதுர்வேதி மங்கலம், உலகுணிமங்கலம் என்று உள்ளது.கி.பி.13ம் நுாற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டின் படி இவ்வூர்கிராம சபையினர் மீன்பிடிவரி வருவாயில்ஆண்டு தோறும் குளங்கள் வெட்டி பராமரித்துள்ளனர். அந்த கல்வெட்டு தமிழ், சமஸ்கிருத மொழியில் உள்ளது, என்றார்.