சபரிமலை : புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. செப்., 21 வரை பூஜைகள் நடைபெறும். நாளை மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். செப்.,17 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்துவார். தொடர்ந்து கணபதி ஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழபூஜை நடைபெறும். செப்., 21 வரை நடை திறந்திருக்கும். அன்று இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த பூஜையிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.