பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
நற்பலன் அதிகரிக்கும் மாதமாக இது இருக்கும். கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன் செப்.21 வரையும், அக்.7க்கு பிறகும் துலாம் ராசியில் இருந்து நன்மை தருவர். குரு, சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவர். மற்ற கிரகங்கள் எல்லாம் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகமான பலன் நடக்காது.
குடும்பத்தில் புதனால் எடுத்த முயற்சி வெற்றி அடையும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.21ல் இருந்து அக்.7 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். செப்.28க்கு பிறகு சுக்கிரனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் அதிகரிக்கும். பெண்களுக்கு தடைபட்ட திருமணம் கைகூடும். கணவரிடத்தில் அன்பும், ஆதரவும் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரனால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். செப்.1க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். தோழிகள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பண உதவி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண் காவலர்கள் சிலர் உயர்பதவியை அடைய வாய்ப்பிருக்கிறது. வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர். சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். செப். 21ல் இருந்து அக். 7 வரை புதன் சாதகமற்று காணப்படுவதால் வேலைக்கு செல்லும் பெண்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் உடனுக்குடன் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
உடல்நலம் மேம்படும். மருத்துவச் செலவு குறையும். பிள்ளைகளின் உடல்நலம் தேறும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மறைமுகப்போட்டி மறையும். கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
* வியாபாரத்தில் அதிக லாபத்தை காண்பீர்கள். வெளியூர் பயணம் சாதக பலனைக் கொடுக்கும். புதிய வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். தங்கம், வெள்ளி, வைர வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானம் காண்பர்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத பணவரவை பெறலாம்.
* அரசு பணியாளர்களுக்கு அலைச்சல், வேலைப்பளு இருக்கும் என்றாலும் அதற்கான பலன் கிடைக்கும். இருப்பினும் சூரியன் துணையோடு உயர்ந்த நிலையை எட்டிப்பிடிப்பர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பிருக்கிறது.
* ஐ.டி., துறையினருக்கு மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* மருத்துவர்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* ஆசிரியர்கள் உயர்ந்த நிலையை அடைவர். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர்.
* பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும்..
* விவசாயிகளுக்கு வருமானம் உயரும். நெல், சோளம், பாசிப்பயறு, தக்காளி, பழவகைகள் மூலம் அதிக வருமானம் பெருகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.
* மாணவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். பொதுஅறிவு வளரும் ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும்.
சுமாரான பலன்கள்
* தனியார் துறை பணியாளர்கள் செப்.21ல் இருந்து அக்.7 வரை வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
* வக்கீல்கள் செப்.21ல் இருந்து அக்.7 வரை மனதில் தளர்ச்சி ஏற்படும் .வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிவோருக்கு பிடிப்பு நிலை இல்லாத நிலை உருவாகலாம். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* அரசியல்வாதிகள் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
நல்ல நாள்: செப்.18,19,20,21,26,27,28,29,30, அக்.3,4,5,8,9,10,15,16
கவன நாள்: செப்.22,23 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9.
நிறம்: சிவப்பு,வெள்ளை.
வழிபாடு:
* சனிதோறும் காக்கைக்கு அன்னமிடுங்கள்.
* செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
* வெள்ளியன்று துர்க்கைக்கு தீபமேற்றுதல்