பதிவு செய்த நாள்
16
செப்
2020
03:09
பழநி: பழநி முருகன் கோவிலில், இரண்டு நாள் உண்டியல் எண்ணிக்கையில், 2.22 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், பிப்., 19, 20ல் உண்டியல் திறந்து, எண்ணப் பட்டது. பின், கொரோனா ஊரடங்கால், மார்ச் கடைசி வாரத்தில், கோவில் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்குப் பின், மீண்டும் நேற்று முன்தினம், உண்டியல்கள் திறந்து, காணிக்கை பணம் எண்ணப்பட்டது. முதல் நாள் எண்ணிக்கையில், ரொக்கம், 91 லட்சத்து, 42 ஆயிரத்து, 530 கிடைத்தது.இரண்டாம் நாளான நேற்று, ரொக்கமாக, 1 கோடியே, 30 லட்சத்து, 98 ஆயிரத்து, 40 கிடைத்தது. இரு நாட்களிலும் சேர்த்து, ரொக்கமாக, 2 கோடியே, 22 லட்சத்து, 40 ஆயிரத்து, 570, தங்கம், -958 கிராம், வெள்ளி-, 12.44 கிலோ, வெளிநாட்டு கரன்சிகள்,- 1,171 கிடைத்துள்ளது.