Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ... காசி விஸ்வநாதர் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலையில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

16 செப்
2020
05:09

உடுமலை: உடுமலை, திருமூர்த்திமலைக்கு மகாளய அமாவாசைக்கு, திதி, தர்ப்பணம் கொடுக்க அனுமதியில்லை, என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலையில், மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்வர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலில் வழக்கமாக நித்ய பூஜைகள் நடந்த நிலையில், பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆண்டு தோறும், தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசைகளில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள், பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, விவசாயிகள் மாட்டு வண்டிகள், ரேக்ளா வண்டிகளில் வந்து, சுவாமிகளை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு, புரட்டாசி மாதம், மகாளய அமாவாசை, நாளை (17ம் தேதி) வருகிறது. தற்போது, கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில், தர்ப்பணம், திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், சிறப்பு பூஜைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக, புரட்டாசி அமாவாசையன்று, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பாலாற்றின் கரையில், திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மாட்டு வண்டிகளிலோ, மற்ற வாகனங்களிலோ, தர்ப்பணம் கொடுக்க வர வேண்டாம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar