Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக ... மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள் மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடுமணல் கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கொடுமணல் கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

17 செப்
2020
03:09

சென்னிமலை: சென்னிமலை அருகே நடந்து வரும் அகழாய்வு பணியில், பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. தற்போது, இந்திய தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில், உதவி தொல்லியலாளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுனர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில், கொடுமணல் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகள், வெள்ளி, செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருட்களை கண்டுபிடித்தனர். தற்போது, கல்லறைகள் இருந்த பகுதியில் ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான மூன்று பானை முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்து கிடந்தன. இதில், ஒரு பானையை நேற்று முன்தினம் புதுச்சேரி பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வு துறை துணை இயக்குனர் சிவானந்தம், கீழடி அகழாய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மண் நிரம்பி கிடந்த அந்த பானையில், (முதுமக்கள் தாழி) மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள் மற்றும் கை, கால் எலும்புகள் ஆகியவை இருந்தன. இதில் சில மாதிரிகளை டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஆய்வுக்குழுவினர், மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்து சென்றனர். தற்போதைய ஆய்வில், கல்மணிகளும், பிராமி எழுத்துக்களையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த அகழாய்வு பணி வரும், 30- வரை நடைபெறும். இத்தகவலை, இந்திய தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar