திருக்கனுார்; செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நேற்று நடந்தது.இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை செட்டிப்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.