பதிவு செய்த நாள்
20
செப்
2020
03:09
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்திலுள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. காலை, 11:30 மணிக்கு, ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 12:00 மணிக்கு உச்சி பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு பால் பூஜை, பள்ளி கொள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல, தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், வடவள்ளி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிகளிலும், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.