* பழுத்த மரம் போல மனிதன் பிறருக்கு பயனுள்ளவனாக வாழ வேண்டும். * நேர்மையை பின்பற்றினால் வாழ்வு உயரும். * ஒழுக்கமுள்ளவனாக வாழ பக்தியே சிறந்த வழி. * பாவமும், புண்ணியமும் செயலைப் பொறுத்தது அல்ல. மனதைப் பொறுத்தது. * மாசில்லாத மனமே கடவுள் வாழும் வீடு * சோர்வு இல்லாத முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும். * பாலுக்குள் இருக்கும் நெய் போல கடவுள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. * வெளிச்சத்தின் அருமை இருளில் புரியும். ஒருவரின் அன்பை அவர் இல்லாத போது தான் உணர முடியும். * பேராசை மனிதனை அழிக்கும். அன்பு அனைவரையும் வாழ வைக்கும். * வளர்ச்சி, தேய்வும் வாழ்வில் மாறி மாறியே வரும். * நல்லது, கெட்டது தெரியாதவனை யாராலும் காப்பாற்ற முடியாது. * செய்த நன்மை, தீமைக்கான பலனில் இருந்து யாரும் தப்ப முடியாது. * அடக்கம், குருபக்தி கொண்டவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். * கீழ்நோக்கி பிடித்தாலும் தீ மேல்நோக்கி எரியும். அதுபோல் உயர்ந்த குணமுள்ளவர்கள் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது. * நீதிநுால்களை தினமும் படியுங்கள். அது நம்மை நல்வழிப்படுத்தும். * பிறரது குற்றங்களை பெரிதுபடுத்தவோ, நாம் செய்த குற்றங்களை மறைக்கவோ கூடாது.