திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி நாட்களில் பிரம்மோற்ஸவம் நடத்தப்படும். ஒன்பது நாளும் உற்ஸவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதிகளில் எழுந்தருள்வார். இதில் ஐந்தாம் நாள் கருட சேவை, ஒன்பதாம் நாள் தேரோட்டம் முக்கியமானவை.