கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். ஐந்து அடி உயரமும், ஓர் அடி குறுக்களவும் கொண்ட இச்சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.