உடுமலை:உடுமலை மதுரை வீர சுவாமி கோவில்கும்பாபிஷேக விழா பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.உடுமலை அருள்மொழி தெருவிலுள்ள மதுரை வீர சுவாமி கோவில் பல ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஜூன் மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதையொட்டி, கோவில் கர்ப்ப கிரகம், கோபுர கலசம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.