பதிவு செய்த நாள்
21
மே
2012
10:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, மகா குருப்பெயர்ச்சி யாகமும், 108 சங்காபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. குருபகவான் மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் ராஜயோக சுப்ரமணியர் ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, அருள்ஜோதி நகரில், சப்த கன்னிகள் நாக தேவதைகள் கோவிலில், மகா குருப்பெயர்ச்சி யாகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யப்பட்டன. முத்துக்கிருஷ்ணன், மகா குருப்பெயர்ச்சி யாகத்தின் நன்மைகள் பற்றி, சொற்பொழிவு ஆற்றினார். ஏற்பாடுகளை, ஜோதிடர் ரவிசந்திரகாளிதாஸ், திருமுருகேஸ்வரி, வெள்ளிங்கிரி, சண்முகம், காளிமுத்து மற்றும் கண்ணுப்பிள்ளையார் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள, மாதேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி வேள்வி நடந்தது. ராசிகளுக்கு பரிகார சங்கல்ப பூஜைகளும், குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும் செய்யப்பட்டன.