கமுதி : கமுதி அருகே புத்துருத்தி கிராமத்தில் கருப்புசாமி கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழா நடந்தது. கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கருப்புசாமி, பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் தலைமையில் கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து முன்னிலையில் சிலம்பாட்டம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.