மறுமை நாளில் இறைவன் யாருடன் பேச விரும்ப மாட்டான் என தோழர் ஒருமுறை சந்தேகம் கேட்டார். காலுக்கு கீழே ஆடையை தரையில் இழுபடும்படி உடுத்துவதில் பெருமை கொள்பவர், பொய் சாட்சி அல்லது பொய் சத்தியம் செய்தவர், மோசமான பொருளை நல்லது என சாமர்த்தியமாக விற்பவர், தான் செய்த தர்மங்களை அடிக்கடி சொல்லி மகிழ்பவர் ஆகியோரை மறுமைநாளில் பார்க்கவோ பேசவோ மாட்டான் என பதிலளித்தார் நாயகம்