பதிவு செய்த நாள்
27
செப்
2020
11:09
திருவண்ணாமலை: மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில், மோட்ச தீபம் ஏற்றினார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று, சென்னை தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.அப்போது, அவரது நெருங்கிய நண்பரான இசை அமைப்பாளர் இளையராஜா, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது ஆன்மா சாந்தியடைய, திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில், ரமணர் சன்னதி முன், நேற்று மாலை, 6:00 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்தார்.**