உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடு நடந்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையொட்டி சுவாமிக்கு நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன். முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.