பதிவு செய்த நாள்
27
செப்
2020
12:09
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் உள்ள அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, தொண்டாமுத்தூரில் உள்ள அரங்கநாதர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பகல், 12:00 மணிக்கு உச்சி பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தாராலட்சுமி, மகாலட்சுமி சமேதர கஸ்தூரிரங்கன், கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.